Home கலை உலகம் ‘என் வீட்டுத் தோட்டத்தில்’ – சிங்கப்பூரில் சிறப்புக் காட்சி!

‘என் வீட்டுத் தோட்டத்தில்’ – சிங்கப்பூரில் சிறப்புக் காட்சி!

2398
0
SHARE
Ad

EVT The Farm 5கோலாலம்பூர் – கார்த்திக் ‌ஷாமலன் இயக்கத்தில் ஜெயா கணேசன், மோகனராஜ், கே.எஸ்.மணியம், மகேசன் பூபாளன், ஹரிதாஸ் உள்ளிட்டோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ‘என் வீட்டுத் தோட்டத்தில்’ என்ற திரில்லர் திரைப்படம் வரும் செப்டம்பர் 28-ம் தேதி முதல் மலேசியாவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகிறது.

இதனிடையே, சிங்கப்பூர் ரசிகர்களுக்காக செப்டம்பர் 22-ம் தேதி, சிறப்புக் காட்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இதற்கான ஏற்பாட்டை படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர் இயக்குநர் எஸ்.எஸ்.விக்னேஸ்வரன் மேற்கொண்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

EVT singapore premierமலேசிய, சிங்கப்பூர் திரைப்பட ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இத்திரைப்படம் அதிகாரப்பூர்வமாக வெளியீடு காண்பதற்கு முன்பே, இதுவரை தமிழ்த் திரைப்படங்கள் சென்றிடாத 3 அனைத்துலக திரைப்பட விழாக்களில் இடம்பெற்று நல்ல பெயர் வாங்கியிருக்கிறது.

கிட்டத்தட்ட 2 மணி நேரம் இருக்கையில் நுனியில் அமர்ந்து பார்க்கும் படியான விறுவிறுப்பான திரைப்படமாக ‘என் வீட்டுத் தோட்டத்தில்’ உருவாகியிருக்கிறது.

சிங்கப்பூர் சிறப்புக் காட்சிக்கான முன்பதிவு தற்போது நடைபெற்று வருகின்றது. வரும் செப்டம்பர் 22-ம் தேதி, வெள்ளிக்கிழமை கார்னிவல் சினிமா (ஷா டவர்ஸ்@பீச் ரோடு) என்ற இடத்தில் நடைபெறவிருக்கும் சிறப்புக் காட்சி டிக்கெட் முன்பதிவு செய்ய பிரியா – 97808124 என்பவரைத் தொடர்பு கொள்க.