Home இந்தியா இரட்டை இலைச் சின்னம்: தீர்ப்பு ஒத்தி வைப்பு!

இரட்டை இலைச் சின்னம்: தீர்ப்பு ஒத்தி வைப்பு!

888
0
SHARE
Ad

SasiPannerசென்னை – இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக, தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

இவ்வழக்கில் நடப்பு தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா தரப்பு வாதங்களைக் கேட்டறிந்த தேர்தல் ஆணையம், வரும் திங்கட்கிழமைக்குள் இருதரப்பு தங்களது வாதங்களை எழுத்துப் பூர்வமாக அளிக்கலாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

அதேவேளையில், இவ்வழக்கு தொடர்பான தீர்ப்பை தேதி குறிப்பிடாமலேயே ஒத்தி வைப்பதாய் அறிவித்தது.

#TamilSchoolmychoice