Home நாடு “சித்தர்கள் காட்டிய வாழ்வு நெறி” கிள்ளானில் ஆன்மீக, இலக்கியச் சொற்பொழிவு

“சித்தர்கள் காட்டிய வாழ்வு நெறி” கிள்ளானில் ஆன்மீக, இலக்கியச் சொற்பொழிவு

1667
0
SHARE
Ad

melmaruvathur-athiparasakthi- function-sithar-feature-03122017கிள்ளான் – தமிழர் பாரம்பரியத்தில் தவிர்க்க இயலாத அளவுக்கு பெருமையும், சிறப்பும் வாய்ந்தவை சித்தர்கள் நமக்கு விட்டுச் சென்ற சித்தர் பாடல்களும், வகுத்துச் சென்ற வாழ்வு முறைகளும்தான்.

அந்த “சித்தர்கள் காட்டிய வாழ்வு நெறி” குறித்த சிறப்பு ஆன்மீக, இலக்கியக் சொற்பொழிவு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 3 டிசம்பர் 2017-ஆம் நாள் இரவு 7.00 மணிக்கு, கிள்ளான், எம்பிகே மண்டபத்தில் உள்ள இ-நூலகத்தில் (e-library) நடைபெறும்.

முனைவர் இளமதி சானகிராமன் இந்த சொற்பொழிவை வழங்குகிறார். இவர் புதுவையிலுள்ள புதுவைப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியராவார்.

#TamilSchoolmychoice

முற்றிலும் இலவசமாக நடைபெறும் இந்த ஆன்மீக, இலக்கியச் சொற்பொழிவு கிள்ளான் நகராண்மைக் கழக உறுப்பினர் சுகுமாறன் சுந்தரம் ஆதரவில் நடைபெறுகிறது. மலேசிய மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக அறப்பணி இயக்கம், மற்றும் கிள்ளான் விண்வெளி கலைமன்றம் ஆகிய இயக்கங்கள் இந்த சிறப்பு சொற்பொழிவை ஏற்பாடு செய்துள்ளன.

melmaruvathur-athiparasakthi- function-sithar-03122017இந்த நிகழ்ச்சி குறித்து மேலும் விவரங்கள் தேவைப்படுவோர் கீழ்க்காணும் செல்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்:

016-3272392; 019-2716552; 019-3619235; 016-3949265

 

Comments