

கோலாலம்பூர் – நம்மைக் கடந்து போகும் 2017-ஆம் ஆண்டில் நடந்த முக்கிய சம்பவங்களை மின்னல் எப்.எம். (பண்பலை) வானொலி தினமும் ‘காலைக் கதிர்’ நிகழ்ச்சியில் காலை 8.00 மணி முதல் 9.00 மணி வரை தொகுத்து வழங்கி வருகிறது.
அந்த வரிசையில் நாளை வியாழக்கிழமை டிசம்பர் 28-ஆம் தேதி காலை 8.00 மணி முதல் 9.00 மணி வரை இடம் பெறும் காலைக் கதிர் நிகழ்ச்சியில் 2017-ஆம் ஆண்டில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்கள் குறித்த தொகுப்பை மின்னல் அறிவிப்பாளர்கள் தெய்வீகன், மற்றும் ஹரி ஆகிய இருவரும் வழங்குகின்றனர்.
அதே வேளையில் பிறக்கின்ற புத்தாண்டில் உலக அளவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் சம்பவங்கள் குறித்தும் இந்த நிகழ்ச்சியில் விவாதிக்கப்படும்.