Home நாடு நஜிப்புக்கு எதிராக வலுவான வழக்கு – மகாதீர் திட்டவட்டம்!

நஜிப்புக்கு எதிராக வலுவான வழக்கு – மகாதீர் திட்டவட்டம்!

938
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 1எம்டிபி ஊழல் விவகாரத்தில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு எதிராக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வலுவான வழக்குப் பதிவு செய்வார்கள் என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

“நாங்கள் இந்த விவகாரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அடிமட்டம் வரையில் சென்று கொண்டிருக்கிறோம். நிறைய மூத்த அதிகாரிகள் தானாக முன்வந்து தகவல்களை அளிக்கிறார்கள். ஆம்.. ஆவணங்களும் தான்.

“இன்னும் கொஞ்சம் நாட்களில், அவருக்கு (நஜிப்புக்கு) எதிராக வழக்குத் தொடுத்து, அவர் மீது குற்றம் சாட்டப்படும்” என மகாதீர் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

மேலும், “அவருடன் இருக்கும் சிலர் அவருக்கு ஆதரவாக இருக்கின்றனர். அவர்கள் யார் இந்த புதிய அரசாங்கத்திற்கு உண்மையாக இருக்கப் போகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியவில்லை” என்றும் மகாதீர் தெரிவித்திருக்கிறார்.