இது பற்றி மலாயன் வங்கியின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான அப்துல் வாகித் ஓமார் கூறுகையில்,
“மும்பையில் தொடங்கப்படவுள்ள இந்த புதிய கிளை, இந்தோனேசியா அனைத்துலக வங்கியின் 97.4% உரிமத்தின் பேரில் செயல்படவுள்ளது.மேலும் இந்தியா மற்றும் ஆசிய நாடுகளுக்கிடையே வர்த்தக ரீதியான தொடர்பை மேம்படுத்தும் வகையில் இவ்வங்கியின் செயல்பாடுகள் இருக்கும்” என்று தெரிவித்தார்.
அத்துடன் மலாயன் குழுமம், தற்போது இருந்துவரும் 30 % சதவிகித அந்நிய முதலீடுகளின் மூலம் கிடைக்கும் லாபத்தை, 40 % சதவிகிதமாக உயர்த்தும் நோக்கத்தோடு, மேலும் இதுபோன்ற புதிய கிளைகளை பல்வேறு நாடுகளில் தொடங்க திட்டமிட்டு வருவதாகவும் ஓமார் தெரிவித்தார்.