Home இந்தியா கலைஞர் உடல்நலம் – மருத்துவமனை முன்பு காவல் துறையினர் குவிப்பு

கலைஞர் உடல்நலம் – மருத்துவமனை முன்பு காவல் துறையினர் குவிப்பு

1271
0
SHARE
Ad

சென்னை – (மலேசிய நேரம் ஆகஸ்ட் 7 – முன்னிரவு 12.30 மணி) கலைஞர் மு.கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் காவேரி மருத்துவமனையில் குவிந்திருக்க – ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலைஞருக்கு ஆதரவான முழக்கங்களுடன் மருத்துவமனை முன்பாகத் திரண்டிருக்க – ஏராளமான எண்ணிக்கையிலான காவல் துறையினர் மருத்துவமனையைச் சுற்றிலும் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

அதே வேளையில், சென்னையின் முக்கிய சாலைகளும் போக்குவரத்துக்காக மாற்றிவிடப்பட்டுள்ளன.

இதற்கிடையில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி திங்கட்கிழமை இரவு சென்னை காவேரி மருத்துவமனைக்கு வந்து கலைஞரின் உடல் நலம் குறித்து விசாரித்தறிந்தார். அவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து கலைஞரின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.