Home இந்தியா சர்ச்சையாகும் மனுஷ்ய புத்திரன் கவிதை இதுதான்!

சர்ச்சையாகும் மனுஷ்ய புத்திரன் கவிதை இதுதான்!

5449
0
SHARE
Ad
மனுஷ்ய புத்திரன்

சென்னை – அண்மையில் பிரபல கவிஞரும், திமுகவின் செய்தித் தொடர்பாளருமான மனுஷ்ய புத்திரன் எழுதி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட “ஊழியின் நடனம்” என்ற தலைப்பிலான கவிதை ஒன்று பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியிருப்பதோடு, இதனால் தமிழகப் பெண்கள் மத்தியிலும், பாஜக அரசியல் கட்சிகளின் மத்தியிலும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

காவல்துறையில் பல புகார்கள் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது இந்தக் கவிதை மனுஷ்ய புத்திரனின் முகநூல் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தான் அந்தக் கவிதையை நீக்கவில்லை என்றும் சர்ச்சையாகிவிடக் கூடாது என சில அதிகாரத் தரப்புகள் நீக்கியிருக்கலாம் என்றும் மனுஷ்ய புத்திரன் கூறியிருக்கிறார்.

அந்தக் கவிதை சமூக ஊடகங்களில் பரவலாக பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகிறது. “ஊழியின் நடனம்” என்ற அந்தக் கவிதை இதுதான்:-

#TamilSchoolmychoice