Home நாடு முத்து நெடுமாறன் கணினித் தமிழுக்கு, கவிஞர் பாதாசன் வார்த்த கவிதைத் தமிழ்!

முத்து நெடுமாறன் கணினித் தமிழுக்கு, கவிஞர் பாதாசன் வார்த்த கவிதைத் தமிழ்!

71
0
SHARE
Ad
முத்து நெடுமாறன்

கணினித் தமிழை உயிராய்க்
கருதும் முத்து நெடுமாறன் !

உலகைத் தன்னுள் அடக்கியுள

ஒப்பருங் குறள் போல் இற்றையநாள்

உலகைக் கைக்குள் ஒடுக்கியுள

#TamilSchoolmychoice

உயர்பொருள் கணினி எனச்சொல்வோம் !

உலகத் தாய்மொழி  ஆங்கிலமும்

உருவாக் கிட்ட கணினியதும்

உலகை ஆளும் என்பதனால்

ஓங்கி நிற்கும் கணினிமொழி !

கவிஞர் பாதாசன்

கணினி மொழியும் இறைவன்போல்

கண்ணால் காண முடிவதில்லை !

கணினி, காணா மொழியாலே

காட்டும் உலகின் பன்மொழியைத்

தனித்தனி யாகப் பிரித்(து) அதனால்

தனிப்பெருந் திறனைத் தன்னுள்ளே

கணினி வைத்தே இருக்கும்,அது

கடவுள் உலகுக் களித்தகொடை !

 

இறைவன் அளித்த அக்கொடையில்

இனிக்கும் தமிழை இணைத்துவிடும்

இறையின் அருளைப் பெற்றவராய்

எங்கட் குள்ளார் முத்தெழிலன் !

நிறைந்த குடமாய்த் தளும்பாமல்

நிறையத் தமிழ்க்கே செய்கின்றார் !

குறைந்த விலையில் கணினிவழி

கொடுக்கின் றாரே தமிழ்எழுத்து !

 

கேரித் தீவில் பிறந்தவராம்

கேளிர் முத்து நெடுமாறன் !

ஊறிக் கணினித் துறையினிலே

உலக அளவில் தமிழ்மொழியை

மாரி யைப்போல் பொழிந்துவரும்

மாபெரும் ஆற்றல் நிறைந்தவராம் !

கூரிய சிந்தனை கணினியிலே

கொண்டே தமிழை வளர்ப்பவராம் !

-பாதாசன்

அருஞ்சொல் விளக்கம் :-

கேளிர் – நண்பர்