Home வணிகம்/தொழில் நுட்பம் ஏர்செல் மேக்சிஸ் வழக்கு – ப.சிதம்பரம் மீது குற்றப் பத்திரிக்கை

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு – ப.சிதம்பரம் மீது குற்றப் பத்திரிக்கை

965
0
SHARE
Ad

புதுடில்லி – இந்தியாவில் நீண்ட காலமாக நடைபெற்று வரும் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் இன்று வியாழக்கிழமை இந்திய அமுலாக்கப் பிரிவு 9 பேர் மீது குற்றப் பத்திரிக்கையை சமர்ப்பித்தது. அவர்களில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரமும் ஒருவராவார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிதம்பரம், பாஸ்கர் ராமன் ஆகியோரோடு 4 மேக்சிஸ் தொடர்புடைய நிறுவனங்கள் மீதும் குற்றப் பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.

வழக்கை விசாரித்து வரும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் குற்றப் பத்திரிக்கை மீதான அடுத்த கட்ட விசாரணையை எதிர்வரும் நவம்பர் 26-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.