Home நாடு ஆமையின் மீது சவாரி செய்தது ஏற்றுக் கொள்ள முடியாது!

ஆமையின் மீது சவாரி செய்தது ஏற்றுக் கொள்ள முடியாது!

714
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: ஓர் ஆமையின் மீது குழந்தை ஒன்று அமர்ந்து சவாரி செய்வது போன்ற காணொளி, சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வந்ததை ஒட்டி, சபா மாநில துணைமுதல்வர் டத்தோ கிறிஸ்டினா லியூ, அம்மாநிலத்தின் வனவிலங்குத் துறையை விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.

சபாவில் பாதுகாக்கப்பட்டு வரும் உயிரினங்களில், ஆமைகளும் ஒன்று. இவ்வாறான செயல்களினால் வன விலங்குகளுக்குப் பாதுகாப்பு இல்லாத தோற்றத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என சபா மாநிலத்தின் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சருமான லியூ கூறினார்.

சுற்றுலாப் பயணிகளை சபா மாநிலத்திற்கு பெருமனத்துடன் வரவேற்பதாகவும், அதே நேரத்தில் அவ்வாறு வருகைப் புரியும் சுற்றுலாப் பயணிகள் சபாவின் வன பாதுகாப்புச் சட்டத்தை மதித்து செயல்படுவார்கள் என நம்புவதாகவும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இது சம்பந்தமாக அந்தப் படகு ஓட்டுனரையும் விசாரிக்க உள்ளதாக லியூ கூறினார்.