Home நாடு நாட்டின் 16-வது மாமன்னர் ஜனவரி 31-ஆம் தேதி பதவியேற்பார்!

நாட்டின் 16-வது மாமன்னர் ஜனவரி 31-ஆம் தேதி பதவியேற்பார்!

673
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாட்டின் 16-வது மாமன்னர் மற்றும் துணை மாமன்னர் வருகிற ஜனவரி 31-ஆம் தேதி பதவியேற்பார்கள் என அரண்மனை முத்திரை காப்பாளர் டான்ஶ்ரீ சேட் டேனியல் சேட் அகமட் கூறினார்.

இன்று, திங்கட்கிழமை இஸ்தானா நெகாராவில், காலை 10:30 மணிக்கு நடைபெற்ற மலாய் ஆட்சியாளர்களின் சந்திப்பு மாநாட்டில் இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும், ஜனவ்ரி 24-ஆம் தேதி புதிய மாமன்னரை மலாய் ஆட்சியாளர்கள் கூட்டம் நடத்தி, தேர்ந்தெடுப்பார்கள் எனவும் அவர் கூறியிருந்தார்.

நாட்டின் 15-வது மாமன்னர் சுல்தான் முகமட், நேற்று அப்பதவியிலிருந்து விலகுவதாக அறிக்கை ஒன்றின் வாயிலாக இஸ்தானா நெகாரா அறிவித்தப் பிறகு இந்த சந்திப்பு மாநாடு நடத்தப்பட்டது.