ஏறத்தாழ 120 மில்லியன் இந்துக்களும் சுற்றுப் பயணிகளும் இந்த கும்ப மேளாவில் அடுத்து வரும் வாரங்களில் திரளுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கும்ப மேளா தொடக்க விழாவில் ஏறத்தாழ 25 மில்லியன் பேர் திரண்டனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கும்பமேளாவின் காட்சிகளை இந்தியாவின் விண்வெளி ஆய்வுக் கழகமான இஸ்ரோவும் தனது துணைக் கோளங்களின் வழியாக புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டது.
அதே வேளையில் வரலாறு காணாத வசதிகளும் இங்கு வரும் பக்தர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த திருவிழாவுக்காக சுமார் 3,200 ஹெக்டர் பரப்பளவில் உலகின் மிகப் பெரிய தற்காலிக நகர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நகரை உருவாக்க செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.
உத்தரப் பிரதேச காவல் துறையினருக்காக சிறப்பு மோட்டார் சைக்கிள்களும் வழங்கப்பட்டுள்ளன.
கும்ப மேளாவுக்காக வருவதற்காக கூடுதல் சிறப்பு இரயில்கள், சிறப்பு பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.



