முன்னதாக, அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், முன்னதாக அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ‘குக்கர்’ சின்னத்தை, தேர்தல் ஆணையம் ஒதுக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். ஆயினும், ‘குக்கர்’ சின்னத்தை வழங்க இயலாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
அமமுக பதிவுச் செய்யப்படாத கட்சி என்றபடியால், அக்கட்சிக்கு பொதுவான சின்னத்தையும் வழங்க இயலாது என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இது குறித்து கருத்துரைத்த நீதிமன்றம், பொதுச் சின்னத்தின் கீழ் போட்டியிட வேண்டும் என்ற அமமுகவின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, நேற்று வியாழக்கிழமை தேர்தல் ஆணையம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் அமமுக கட்சிக்கு ‘பரிசு பெட்டி’ சின்னமாக அறிவிக்கப்பட்டது.