இந்தப் படத்தை விஷால் தயாரித்திருந்தார். படம் முழுக்கவும் குற்றம் தொடர்பான திகில் சம்பவங்கள் இடம் பெற்றிருந்தன.
தற்போது இரண்டு ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை எடுப்பதற்கு உறுதியாகியுள்ளது. சுந்தர்.சி இயக்கத்தில் துருக்கியில் படப்பிடிப்பில் இருக்கும் விஷாலை நேரில் சந்தித்த மிஷ்கின் படத்தின் கதையைக் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து ‘துப்பறிவாளன் 2’ விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் குறித்து கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.