Home இந்தியா பாகிஸ்தான்: தீவிரவாதத்தை நிறுத்தாவிட்டால் தண்ணீர் கிடையாது!

பாகிஸ்தான்: தீவிரவாதத்தை நிறுத்தாவிட்டால் தண்ணீர் கிடையாது!

538
0
SHARE
Ad

அம்ரித்சார்: பாகிஸ்தான் தரப்பு தீவிரவாதத்தை நிறுத்திக் கொள்ளாவிட்டால் இந்தியாவிலிருந்து செல்லும் தண்ணீர் நிறுத்தப்படும் என இந்திய மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி எச்சரிக்கை விடுத்துள்ளார்

இந்திய நதிகள் மூலம் பாகிஸ்தானுக்கு கொடுக்கப்படும் தண்ணீர் குறித்து அரசு ஆலோசித்து வருவதாகவும், அதனை தடுத்து நிறுத்துவதற்கு மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளது எனவும் அவர் கூறினார். 1960-ஆம் ஆண்டு, இந்த விவகாரம் குறித்து, இந்தியாபாகிஸ்தான் இடையே ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

“தீவிரவாதத்தை தூண்டும் போக்கை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ளாவிட்டால், பாகிஸ்தானுக்கு தண்ணீர் தருவதை நிறுத்தி விடுவோம்என அவர் குறிப்பிட்டுள்ளார்.