இதில் பாகிஸ்தான் படுமோசமான தோல்வியைச் சந்தித்தது. முதல் பாதி ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவு பந்து வீச, பாகிஸ்தான் 50 ஓவர்களில் 105 பந்துகளிலேயே 10 விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது.
இதனைத் தொடர்ந்து மேற்கிந்தியத் தீவு 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது. ஒருநாள் போட்டியில் சில மணி நேரங்களிலேயே ஆட்டத்தை முடித்து பாகிஸ்தானை வென்றிருக்கிறது மேற்கிந்தியத் தீவுகள் அணி.
இன்று நடைபெறும் உலகக் கிண்ணப்போட்டிகளின் வரிசையில் இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் ஆட்டத்தில் நியூசிலாந்தும் இலங்கையும் மோதுகின்றன.
இரண்டாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், ஆப்கானிஸ்தானும் மோதுகின்றன.