இவ்வாண்டு தமிழ் விழாவின் முதல் அங்கமாக பரதநாட்டியப் போட்டி கடந்த 8 மற்றும் 9 ஜூன் அன்று சிறப்புடன் நடைபெற்றது.
13 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான பிரிவில் முதல் நிலையில் வாகை சூடியவருக்கு மலேசிய இந்திய தூதரகத்தின் சுழற்கிண்ணமும் வெற்றிக் கோப்பையும் RM 1,250 ரொக்கத் தொகையும் பரிசளிக்கப்பட்டது.
முதல் நிலை – குமாரி தேவனஶ்ரீ இளங்கோ
இரண்டாம் நிலை – குமாரி நவீனா ஶ்ரீ கருணாகரன்
மூன்றாம் நிலை – குமாரி டினீஷா ஶ்ரீ இராகவன்
நான்காம் நிலை – குமாரி தேஜஸ்வினி சத்தியசீலன்
ஐந்தாம் நிலை – குமாரி அஷிகா சேந்தன்
14 வயதிற்கு மேற்பட்டோருக்கான பிரிவில் முதல் நிலையில் வாகை சூடியவருக்கு மலேசிய இந்திய தூதரகத்தின் சுழற்கிண்ணமும் வெற்றிக் கோப்பையும் RM 2000 ரொக்கத் தொகையும் பரிசளிக்கப்பட்டது.
முதல் நிலை – குமாரி டெசாலினி கணேசன்
இரண்டாம் நிலை – குமாரி ஓமனா சேதுமாதவன்
மூன்றாம் நிலை – குமாரி டெனாஸ்வரி கணேசன்
நான்காம் நிலை – குமாரி பத்மஷர்மினி புஷ்பநாதன்
ஐந்தாம் நிலை – குமாரி சங்கரி தியாகராஜா
ஶ்ரீ அண்டலாஸ் மாரியம்மன் ஆலயத்தின் அறங்காவலர் டத்தோ மேஜர் M.S.மூர்த்தி அவர்கள் ரொக்கப் பரிசுக்கான தொகையை நன்கொடை அளித்து சிறப்பித்தார். மேலும் இப்போட்டிக்கு ஆதரவளித்த தெப்பி சுங்கை ஶ்ரீ செல்வ விநாயகர் ஆலயம், கிள்ளான் ஶ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், வல்லினம் மற்றும் இக்சோரா உணவகம் ஆகியோருக்கும் ஏற்பாட்டாளர்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
தமிழ் விழாவின் அடுத்த அங்கமாக ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் 15 ஜூன் அன்று கிள்ளான் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியிலும், இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கான புதிர்ப்போட்டி 29 ஜூன் அன்று ஶ்ரீ அண்டலாஸ் மகாமாரியம்மன் ஆலய மண்டபத்திலும் நடைபெறவுள்ளது.
மேல் விபரங்களுக்கு : திரு.சு.குகனேசன் 0127477874 / 0333240678.