கோலாலம்பூர் : நம் நாட்டில் நீண்ட காலமாக ஆசிரியராக, விரிவுரையாளராகப் பணியாற்றி அனுபவம் பெற்ற முனைவர் இராஜகோபால் பொன்னுசாமி எழுதிய “மாறுவோம்
மாற்றுவோம் ஆசிரியம் போற்றுவோம்” என்ற நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் சனிக்கிழமை 31 மே 2025-ஆம் நாள் மாலை 4.00 மணிக்கு கோலாலம்பூர், டான்ஸ்ரீ
கே.ஆர்.சோமா மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது.
தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ பா.சகாதேவன் இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி நூலை வெளியிட்டு சிறப்பு செய்வார்.
பெஸ்தாரி ஜெயா, ஹோப்புள் தோட்ட மண்ணின் மைந்தர்கள், தமிழ்ப் பள்ளி மற்றும் ஆலயங்களின் ஆதரவுடனும் ஒத்துழைப்புடனும் இந்த நூல் வெளியீட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் மூன்று தலைசிறந்த ஆசிரியர்களுக்கும், ஒரு மக்கள் நேய சமூக சேவையாளருக்கும் பாராட்டு செய்யப்படும்.
அனைவரும் கலந்து கொண்டு நூல் வெளியீட்டு விழாவைச் சிறப்பிக்கும்படி நூலாசிரியர் முனைவர் இராஜகோபால் கேட்டுக் கொள்கிறார்.
தொடர்புக்கு: +6012-9307150