Home நாடு ஊழல் தடுப்பு ஆணையம், ‘டான்ஸ்ரீ’யின் 32 மில்லியன் ரிங்கிட் சொத்துகளை பறிமுதல் செய்தது!

ஊழல் தடுப்பு ஆணையம், ‘டான்ஸ்ரீ’யின் 32 மில்லியன் ரிங்கிட் சொத்துகளை பறிமுதல் செய்தது!

93
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கூட்டரசு நெடுஞ்சாலை ஒன்றின் சாலைப் போக்குவரத்து (டோல்) உரிமம் பெற்ற நிறுவனத்தைச் சேர்ந்த டான்ஸ்ரீ அந்தஸ்து கொண்ட வணிகப் பிரமுகர் ஒருவர் மீது ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.

கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள அந்த நெடுஞ்சாலை நிர்மாணிப்பிற்கான நிதிகளை முறைகேடாகக் கையாண்டதற்காக விசாரிக்கப்படும் அந்த டான்ஸ்ரீ நபரிடமிருந்து 32 மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய சொத்துகளை ஊழல் தடுப்பு ஆணையம் பறிமுதல் செய்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளில் கைப்பைகள், நகைகள், ஆடம்பர சொகுசு கார்கள், கைக்கெடிகாரங்கள், ரொக்கப் பணம் ஆகியவை அடங்கும். சம்பந்தப்பட்ட நபரின் இரண்டு இல்லங்களைச் சோதனையிட்டதில் இந்த சொத்துகள் கைப்பற்றப்பட்டன.

#TamilSchoolmychoice

கைப்பற்றப்பட்ட 217 ஆடம்பர கைக்கெடிகாரங்களின் மதிப்பு சுமார் 5 மில்லியன் ரிங்கிட் என்றும், 27 கைப்பைகளின் மதிப்பு ஒரு மில்லியன் ரிங்கிட்டும் மேல் இருக்கும் என்றும் நகைகளின் மதிப்பு 4 மில்லியன் ரிங்கிட்டும் மேல் இருக்கும் என்றும் ஊழல் தடுப்பு ஆணையத்தின் தகவல்கள் தெரிவித்தன.

கைப்பற்றப்பட்ட ஆடம்பர சொகுசு கார்களின் மதிப்பு 7 மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேல் இருக்கும் என்றும் மதிப்பிடப்படுகிறது.

இவை தவிர விலையுயர்ந்த மதுபானங்களும் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. அவற்றின் மதிப்பு 3 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட பொருட்கள் வைக்கப்பட்டிருந்த ஆடம்பர சொகுசு இல்லத்தின் மதிப்பு 12 மில்லியனுக்கும் மேல் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.