
சென்னை:தமிழ் சினிமாவின் நீண்ட கால நடிகரும் யூடியூப் வலைத்தளங்களில் பல்வேறு விவகாரங்கள் குறித்து உரை நிகழ்த்தியும், பிரமுகர்களைப் பேட்டி கண்டும் பிரபலமானவருமான ராஜேஷ் இன்று காலமானார்.
மிக அண்மையக் காலம் வரை அவர் யூடியூப் தளங்களில் நேர்முகக் காணல்கள் நடித்துக் கொண்டிருந்தார். அப்போதெல்லாம் தெளிவாகப் பேசுபவராகவும் உடல் ஆரோக்கியத்துடனும் திகழ்ந்த ராஜேஷின் திடீர் மரணம் திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் ராஜேஷின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து வருகின்றனர்.
ஆசிரியராகப் பணியைத் தொடங்கியவர் ராஜேஷ். பின்னர் சினிமாப் படங்களில் நடிக்கத் தொடங்கினார். கன்னிப்பருவத்திலே படத்தில் முதன் முதலில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக பாக்கியராஜூடன் நடித்தார்.
அவர் நடித்த படங்களில் அந்த ஏழு நாட்கள் குறிப்பிடத்தக்க படமாகும்.
திடீர் மூச்சுத் திணறலால் அவர் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.