முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 44.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 212 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
அடுத்து 213 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அபாரமாக விளையாடி 33.1 ஓவர்களிலேயே 213 ஓட்டங்களை எடுத்தது. 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்தது.
இதனைத் தொடர்ந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வென்றது.
இன்று சனிக்கிழமை இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
இலண்டனில் நடைபெறும் ஆட்டத்தில் இலங்கையும் ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன.
மற்றொரு ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவும் ஆப்கானிஸ்தானும் களம் காண்கின்றன.
நாளை ஞாயிற்றுக்கிழமை கிரிக்கெட் உலகம் எப்போதும் பரபரப்புடன் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் நடைபெறுகிறது.