Home உலகம் புற்றுநோய்க்கு ஊசி மருந்து மூலம் சிகிச்சை – கண்டு பிடித்த இங்கிலாந்து

புற்றுநோய்க்கு ஊசி மருந்து மூலம் சிகிச்சை – கண்டு பிடித்த இங்கிலாந்து

290
0
SHARE
Ad

இலண்டன் : நீண்ட காலமாக மனித குலத்தைப் பயமுறுத்தி வருவது புற்றுநோய். வயது வித்தியாசம் பாராமல் தாக்கும் இந்நோய்க்கான தீர்வு குறித்த ஆராய்ச்சிகளும் நீண்ட காலமாக நடைபெற்று வந்தன.

இந்த ஆராய்ச்சிகளின் பலனாக, உலகிலேயே முதல்முறையாக இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை இலாகா (NHS) புற்றுநோய்க்குச் சிகிச்சை அளிக்கக் கூடிய ஊசியைக் கண்டுபிடித்துள்ளது. இந்த ஊசியை நோயாளிக்குச் செலுத்தினால், அடுத்த 7 நிமிடங்களில் அந்த மருந்து வேலை செய்யத் தொடங்கிவிடும் என அந்நாட்டு அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஊசி மருந்தை பொதுமக்களும் பயன்படுத்த அங்கீகரிக்க வேண்டும் என பிரிட்டனின் சுகாதார சேவை இலாகா விண்ணப்பித்துள்ளது.

#TamilSchoolmychoice

மக்கள் பயன்பாட்டுக்கு வந்தால், இந்த ஊசியால் புற்றுநோய்க்குச் சிகிச்சை அளிக்கும் காலம் மூன்றில் ஒரு பங்காகக் குறையும் என்றும் கூறுகின்றனர்.