“விசாரணையை தள்ளுபடி செய்வது இனி பொருத்தமானதல்ல. இந்த வாதத்தை விசாரணையின் முடிவில் நாங்கள் வைப்போம்,” என்று அவர் கூறினார்.
துணை அரசாங்க வழக்கறிஞர் முகமட் இசாத் பாவ்சான் அவரின் முடிவினை எதிர்க்கவில்லை.
நீதிபதி அப்துல் ரஹ்மான் செபில் இந்த கோரிக்கையை ஏற்று நஜிப் தரப்பின் முறையீட்டை நிறைவேற்றினார். இன்று 66-வது பிறந்தநாளைக் கொண்டாடும் நஜிப், குற்றவியல் நம்பிக்கை மீறல், அதிகார அத்துமீறல் மற்றும் எஸ்ஆர்சி இன்டர்நேஷனலின் நிதி சம்பந்தப்பட்ட பண மோசடி தொடர்பான ஏழு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்.