Home One Line P1 “நாம் அனைவரும் மனித இனத்தின் ஒரு பகுதி!”- இஸ்லாமிய மத போதகர் இசானுடின்

“நாம் அனைவரும் மனித இனத்தின் ஒரு பகுதி!”- இஸ்லாமிய மத போதகர் இசானுடின்

604
0
SHARE
Ad
படம்: நன்றி டி ஸ்டார்

அலோர் காஜா: இங்குள்ள ஒரு மத போதகர், இனரீதியான கருத்துகளை வெளியிடுவதன் மூலம் சக மலேசியர்களின் உணர்வுகளை புண்படுத்துவதை நிறுத்துமாறு மக்களை வலியுறுத்தியுள்ளார்.

இதுபோன்ற கருத்துகளை வெளியிடுபவர்கள் அவர்களைப் பற்றி தாக்குதல் செய்திகளை அனுப்பினால் அவர்கள் எப்படி உணருவார்கள் என்பதைப் பற்றி இருமுறை சிந்திக்க வேண்டும் என்று கம்போங் பாரு மசூதியின் இமாம் இசானுடின் மாட் தாஹிர் தெரிவித்ததாக டி ஸ்டார் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

மற்றவர்களிடம் இரக்கம் கொள்வோம், நாம் அனைவரும் மனித இனத்தின் ஒரு பகுதியாக இருக்கிறோம். நாம் எப்போதும் நிம்மதியாக வாழ வேண்டும், சர்வவல்லவர் எங்களுக்கு ஆசீர்வதித்த எங்கள் ஒற்றுமையை மதிக்க வேண்டும் என்று நான் எப்போதும் பிரார்த்திக்கிறேன்,” என்று அவர் நேற்று செவ்வாயன்று இங்குள்ள பைடினுல் நூர் தாபிஸ் மதப் பள்ளியில் ஒற்றுமை மற்றும் சமூக நல்வாழ்வு அமைச்சர் பொன். வேதமூர்த்தியை வரவேற்கும் நிகழ்ச்சியில் குறிப்பிட்டார்.