Home One Line P1 ஆட்சியில் தொடர்ந்து நீடிக்க நம்பிக்கை கூட்டணி இன, மத அரசியலை தவிர்க்க வேண்டும்!

ஆட்சியில் தொடர்ந்து நீடிக்க நம்பிக்கை கூட்டணி இன, மத அரசியலை தவிர்க்க வேண்டும்!

618
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 15-வது பொதுத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி அரசு தொடர்ந்து வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வதாக இருந்தால், அரசாங்கம்  நேர்மையாக இருப்பதுடன்,  பிரதான அரசியலில் மிதமான கொள்கைகளைக் கொண்ட ஓர் அரசியல் கூட்டணியாக மாற வேண்டும் என்று பாசிர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் அப்துல் கரிம் பரிந்துரைத்துள்ளார்.

இன மற்றும் மத அரசியலை நிராகரித்து, மக்களின் சமூகபொருளாதார பிரச்சனைகளை உள்ளடக்கிய விவகாரங்களில் முக்கியத்துவம் செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலான பேச்சுக்கள் மற்றும் நடவடிக்கைகளின்படி, சுய தேர்தல் அறிக்கையை பூர்த்தி செய்யாதது, நாட்டின் முக்கிய கொள்கை முடிவுகளை எடுப்பதில் பல்வேறு திருப்பங்களைச் செய்வது போன்றவைகள் நிறுத்தப்பட வேண்டும், மீண்டும் செய்ய வேண்டாம்.” என்று அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

ஊழல் நிறைந்த தேசிய முன்னணியை அகற்றுவதற்கும், நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தை நம்பிக்கையுடனும் மாற்றிய மக்களிடம் மன்னிப்புக் கோரி, அனைத்து துறைகளைச் சேர்ந்த முதியவர்கள் மற்றும் இளைஞர்களிடம் நாம் மன்னிப்பு கோருவோம்என்று அவர் இன்று செவ்வாய்க்கிழமை செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகளுக்கு எதிராக தவறான, நெறிமுறையற்ற மற்றும் ஜனநாயக விரோத வழிகளில் செயல்பட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

மலேசியாவில் நடைமுறையில் உள்ள தாராளமய ஜனநாயகத்தின் அரசியல் என்பது எண்களின் விளையாட்டு. எதிராளியை விட யார் அதிகம் வென்றாலும் அவர் தான் வெற்றியாளர். நம்பிக்கைக் கூட்டணி நேர்மையானதாக இருந்தால், முக்கிய அரசியலில் மிதமான அடிப்படையைக் கொண்ட ஒரு பண்பாட்டு உள்ளடக்கம், குறுகிய இன மற்றும் மத அரசியலை நிராகரித்தல், மக்களின் சமூகபொருளாதார பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளித்தல் ஆகியவற்றை ஆதரித்தால், வரவிருக்கும் பொதுத் தேர்தலில் தொடர்ந்து ஆட்சிப் பெற்று நீடிக்கும்.என்று ஹசான் கூறினார்.