Home One Line P1 “நான் இல்லாத போது, நாட்டின் எதிர்காலத்திற்கு உத்தரவாதமில்லை!”- மகாதீர்

“நான் இல்லாத போது, நாட்டின் எதிர்காலத்திற்கு உத்தரவாதமில்லை!”- மகாதீர்

705
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இந்த நேரத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளும், அவை எவ்வாறு செய்யப்பட்டிருந்தாலும் விரும்பியதை அடையும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று டாக்டர் மகாதீர் முகமட் நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

நியூயார்க்கில் உள்ள அமெரிக்க வெளியுறவு கூட்ட (சிஎப்ஆர்) உறுப்பினர்கள் முன் பேசிய பிரதமர், 2003-இல் தாம் பதவி விலகியபோது, நாடு தனது இலக்குகளை அடைவதற்கான பாதையில் அமைக்கப்பட்டிருந்தது என்று கூறினார்.

பொருளாதாரம் சிறப்பாக செயல்பட்டது, அரசியல் சரியாக இருந்தது, மற்றும் நாட்டின் நிலைத்தன்மையும் சிறப்பாக இருந்தது. ஆனால் மற்ற தலைவர்களுக்கு வெவ்வேறு கருத்துக்கள் இருந்தன. எனவே, நான் இல்லாத போது, திட்டமிடப்பட்டதை அவர்கள் சிறப்பாக செய்வார்கள் என்று இப்போது என்னால் உத்தரவாதம் அளிக்க முடியாது, ஆனால் வெற்றிபெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை நாம் செய்ய வேண்டும்என்று அவர் கூறினார்.