புதுடில்லி,ஏப்.5- அடுத்த பிரதமராக ராகுல் வந்தால் வரவேற்பேன் என பிரதமர் மன்மோகன்சிங் கூறினார்.
டில்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன்சிங் பேசியதாவது காங்கிரஸ் கட்சியில் இரு அதிகாரம் குறித்து மீடியாக்கள் தான் பெரிதுபடுத்தி வருகின்றன.
இரண்டாவது முறையாக நான் பிரதமர் பதவியை இன்னும் நிறைவு செய்யவில்லை. மூன்றாவது முறையாக நான் பிரதமராவது குறித்து இப்போது தெரிவிக்கமுடியாது. நேற்று சி.ஐ.ஐ. மாநாட்டில் ராகுலின் பேச்சு சிறப்பாக இருந்தது. அடுத்த பிரதமராக ராகுல் வந்தால் அதனை வரவேற்பேன் என்றார்.
