Home One Line P2 இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான தேச துரோக வழக்கை காவல் துறை திரும்பப்பெறும்!

இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான தேச துரோக வழக்கை காவல் துறை திரும்பப்பெறும்!

846
0
SHARE
Ad

புது டில்லி: இந்தியாவில் தொடர்ந்து நடந்து வந்த இனம்மத ரீதியிலான கும்பல் கொலைகள் போன்ற சம்பவங்களினால் அந்நாட்டில் வாழ்வதற்கான தகுதியை குறைத்து வருவதாக இந்தியத் திரைப்பட இயக்குனர்களான மணிரத்னம்அனுராக் காஷ்யப் மற்றும் அடூர் கோபால கிருஷ்ணன் பிரதமர் நரேந்திர மோடிக்கு அண்மையில் கடிதம் எழுதியிருந்தனர்.

இது தொடர்பாக இவர்கள் மீது வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் மிஜாப்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் இவர்களுக்கு எதிராக புகார் மனுவைக் கொண்டு வந்துள்ளார்.

இந்த புகார் மனுவை விசாரித்த மிஜாப்பூர் தலைமை நீதிபதி சூர்யா காந்த் திவாரி மனுவை ஏற்று மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது வழக்குப் பதிவு செய்திட கடந்த வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார்இதனை அடுத்துபீகாரில் உள்ள சர்தார் காவல் நிலையத்தில் 49 பேர் மீதும் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. 

#TamilSchoolmychoice

தற்போது, இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான தேச துரோக வழக்கை திரும்பப்பெற பீகார் காவல் துறை முடிவு செய்துள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

புகார் அளித்தவர் தவறான தகவல்களை அளித்ததன் பேரில் காவல் துறையினர் இந்த நடவடிக்கையை எடுத்ததாக காவல் துறை செய்தி தொடர்பாளர் ஜிதேந்திர குமார் தெரிவிரத்தார். மேலும், அந்நபர் சுய விளம்பரத்திற்காக அவ்வாறு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, இவர்கள எழுதிய கடிதத்தில் இத்தகைய சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி இது குறித்து கண்டனம் தெரிவித்ததோடு, அதனை தீர்க்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளார் என்றும் கேள்விகளை எழுப்பியிருந்தனர்.