Home One Line P1 “ஒரு மில்லியன் குடிமக்கள் அல்லாதவர்களுக்கு தகுதி இல்லாவிட்டாலும் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது!”- மகாதீர்

“ஒரு மில்லியன் குடிமக்கள் அல்லாதவர்களுக்கு தகுதி இல்லாவிட்டாலும் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது!”- மகாதீர்

1038
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இந்த நாட்டில் ஒரு மில்லியன் குடிமக்கள் அல்லாதவர்களுக்கு சுதந்திரத்திற்குப் பிறகு குடியுரிமை வழங்கப்பட்டது என்பதை பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தமது வலைத்தளத்தில் எடுத்துரைத்துள்ளார்.

மலாய் தன்மான காங்கிரஸ் இனவாத கூட்டமாகக் கருதப்படும் போது ஏமாற்றம் அளிப்பதாக அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஐரோப்பிய காலனிகள் சுதந்திரம் பெற்றபோது, ​​பல குடிமக்கள் அல்லாதவர்களுக்கு பாகுபாட்டுடன் நடத்தப்பட்டனர். சிலர் நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. சிலர் வன்முறைக்கு ஆளானார்கள்.

#TamilSchoolmychoice

இந்நாட்டில் அப்படி இல்லை. குடிமக்கள் அல்லாதவர்கள் குடிமக்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டார்கள். உண்மையில், ஒரு மில்லியன் குடிமக்கள் அல்லாதவர்கள் தகுதி இல்லாவிட்டாலும் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளார்கள்.

இந்நாட்டின் அசல் மக்கள் தங்கள் சொந்த நாட்டில் ஒன்றுகூட அனுமதிக்கப்பட முடியவில்லை என்பது ஏமாற்றமாக உள்ளது. நிச்சயமாக, நான் இதை எழுதுவதற்கு இனவெறி என்று என்னை முத்திரை குத்திவிடுவார்கள்,” என்று அவர் கூறினார்.

இந்த மாதத் தொடக்கத்தில் மலாய் தன்மான காங்கிரஸ் கூட்டத்தில் பேசிய டாக்டர் மகாதீர் மலாய்க்காரர்கள் பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெற்ற போது, அதற்கு ஈடாக வெளிநபர்களுக்கும் குடியுரிமை வழங்க மலாய்க்காரர்கள் ஒப்புக் கொண்டதை குறிப்பிட்டிருந்தார்.