இந்தத் தகவலைத் தெரிவித்த ம.இ.கா தேசியத் தலைமைச் செயலாளர் டத்தோ அசோஜன், இந்த உபசரிப்பில் நாடெங்கிலும் இருந்து சுமார் 5 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர் என்று தெரிவித்தார்.
மஇகாவின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சிக்கு ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தலைமையேற்பார் என்று அசோஜன் தெரிவித்தார்.
அம்னோ தேசியத் தலைவரும், தேசிய முன்னணியின் கூட்டணித் தலைவருமான டத்தோஸ்ரீ சாஹிட் ஹமிடியும் இந்த உபசரிப்பில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வார்.
இந்த தீபாவளி உபசரிப்பு மிகவும் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த உபசரிப்புக்கு மேலும் வெளிநாட்டு தூதர்கள், வர்த்தகர்கள், பொது இயக்கத் தலைவர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொள்ளும் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களை மகிழ்ச்சியூட்டும் வகையில் உள்ளூர் கலைஞர்கள் பாரம்பரிய ஆடல், பாடல், நடனங்களை வழங்கவுள்ளனர். அதேநேரத்தில் சுவையான உணவுகளும் வழங்கப்படவுள்ளன.
ஆகவே, ம.இ.கா தலைவர்கள், தொண்டர்கள்,பொது மக்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளும்படி ஏற்பாட்டுக் குழுவின் சார்பில் டத்தோ அசோஜன் கேட்டுக் கொண்டார்.