Home அரசியல் வெளிநாட்டு சொத்து விவரங்களை வெளியிடத் தயாரா? ராஜா நோங் சிக்கிற்கு நூருல் இசா சவால்!

வெளிநாட்டு சொத்து விவரங்களை வெளியிடத் தயாரா? ராஜா நோங் சிக்கிற்கு நூருல் இசா சவால்!

564
0
SHARE
Ad

Nurulகோலாலம்பூர், ஏப்.8-  கூட்டரசு பிரதேச நகர்புற நல்வாழ்வுத்துறை அமைச்சர் டத்தோ ராஜா நோங் வெளிநாட்டிலுள்ள அவரின் சொத்து விவரங்களை வெளியிடத் தயாரா என்று லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் நூருல் இசா சவால் விடுத்துள்ளார்.

வரும் பொதுத்தேர்தலுக்கு முன் தான் என் வசமுள்ள சொத்து கணக்குகளை காண்பிக்க தயாராக இருப்பதாகவும் அதே போல் டத்தோ ராஜா நோங் சிக் அவரிடமுள்ள சொத்து கணக்குகளை வழங்க முன்வருவாரா? என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார்.

லெம்பா பந்தாய் நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெற்ற மருத்துவ முகாமில் பேசுகையில் நூருல் இசா மேற்கண்டவாறு கூறினார்.

#TamilSchoolmychoice

மேலும், ராஜா நோங் சிக்  மகளுக்கு சொந்தமான இஸ்தி ஜூவாரா நிறுவனத்திற்கு இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சு கொடுத்த 3 கோடியே 90 லட்சம் வெள்ளி குத்தகை வழங்கியது குறித்து டத்தோ ராஜா நோங் சிக் பதிலளிக்க வேண்டும் என்றும் நூருல் இசா கேட்டுக் கொண்டார்.

லெம்பா பந்தாய் நாடாளுமன்ற தொகுதியில் நூருல் இசாவை எதிர்த்து ராஜா நோங் சிக் போட்டியிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.