Home One Line P2 மகாராஷ்டிரா: தேவேந்திர பாட்னாவிஸ் முதல்வர் பதவியிலிருந்து விலகல்!

மகாராஷ்டிரா: தேவேந்திர பாட்னாவிஸ் முதல்வர் பதவியிலிருந்து விலகல்!

705
0
SHARE
Ad

புது டில்லி: மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பாட்னாவிஸ் மகாராஷ்டிரா முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

“எங்களிடம் எதிர்பார்த்த பெரும்பான்மை இல்லை என்பதை நாங்கள் உணர்ந்தோம். பாஜக எதிர்க்கட்சியாக மக்களின் குரலாக இனி இருக்கும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாளை புதன்கிழமை (நவம்பர் 27) பெரும்பான்மையை நிர்ணயிக்கும் வாக்கெடுப்புக்கு முன்னதாக, என்சிபி தலைவர் அஜித் பவார் துணை முதல்வர் பதவியிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது. 

#TamilSchoolmychoice

கடந்த சனிக்கிழமை காலை, தேவேந்திர பாட்னாவிஸ் மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றார். அஜீத் பவார் துணை முதல்வராகப் பதவியேற்றார்.

தேவேந்திர பாட்னாவிஸ் இன்று செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பின் போது தனது பதவி விலகல் குறித்து தெரிவித்துள்ளார்.