Home One Line P1 நஜிப் தொடுத்த வழக்கைச் சந்திக்க அம்பேங்க் தயார்!

நஜிப் தொடுத்த வழக்கைச் சந்திக்க அம்பேங்க் தயார்!

618
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், அம்பேங்க் நிறுவனத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை அந்த வங்கி சந்திக்கத் தயார் என்று தெரிவித்துள்ளது.

1எம்டிபி ஊழல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய ஜோ லோவிடமிருந்து அறிவுறுத்தல்களைப் பெற்றதற்காகவும், அவரது வங்கி தகவல்களை வெளிப்படுத்தியதற்காகவும் அம்பேங்க் மற்றும் அவரது முன்னாள் தகவல் தொடர்பு மேலாளர் ஜோனா யூ மீது நஜிப் வழக்குத் தாக்கல் செய்ததாக நேற்று செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

அம்பேங்க் மற்றும் அதன் முழு உரிமையாளரான அம்பேங்க் இஸ்லாமிக் பெர்ஹாட் ஆகியவை டிசம்பர் 9-ஆம் தேதியிடப்பட்ட நஜிப்பின் சம்மனைப் பெற்றதாகத் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

ஏஎம்எம்பி மற்றும் அம்பேங்க் இஸ்லாமிக், இந்த வழக்கை எதிர்த்துப் போராட வழக்கறிஞர்களை நியமித்துள்ளனர். மேலும் குற்றச்சாட்டுகள் நிற்காது என்றும், அம்பேங்க் இஸ்லாமிக் மற்றும் நிறுவனம் வலுவான வாதங்களைக் கொண்டுள்ளன என்று வழக்கறிஞர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.” என்று நேற்று செவ்வாய்க்கிழமை புர்சா மலேசியாவுடன் ஒரு கூட்டு அறிக்கையில் அம்பேங்க் தெரிவித்தது.

1எம்டிபி மற்றும் அதன் முன்னாள் துணை நிறுவனமான எஸ்ஆர்சி இன்டர்நேஷனலின் பண மோசடிக்கு பின்னால் ஜோ லோ இருப்பதாக நம்பப்படுகிறது. அந்தப் பணத் தொகைகளில் சில நேரடியாக நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளன. தற்போது மோசடி வழக்கு விசாரணையில் உள்ள நஜிப், இந்த பணம் ஜோ லோவால் சவுதி அரச குடும்பத்தினரிடமிருந்து நன்கொடையாகப் பெறப்பட்டது என்று கூறி வருகிறார்.

எவ்வாறாயினும், விசாரணையின் போது, ​​தனது வங்கிக் கணக்கு தொடர்பான விஷயங்களில் ஜோ லோவிடம் இருந்து அறிவுறுத்தல்களைப் பெற அம்பேங்கிற்கு உத்தரவிடவில்லை என்று நஜிப் பலமுறை கூறினார்.

நிதி சேவைகள் சட்டம் மற்றும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் சட்டம் 1989 (பாபியா) ஆகியவற்றை மீறியதாக, அம்பேங்க் மற்றும் யூ ஆகியோரிடமிருந்து  நஜிப் இழப்பீடு கோருகிறார்.