Home One Line P1 கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளில் குளிர்காலம் பிப்ரவரி வரை நீடிக்கும்!

கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளில் குளிர்காலம் பிப்ரவரி வரை நீடிக்கும்!

1083
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சமீபக் காலமாக கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதிகளில் குளிர் அதிகமாகக் காணப்படுகிறது.

பொதுவாக குளிர்கால பருவமழை என்று அழைக்கப்படும் வடகிழக்கு பருவமழை காரணமாக நாடு குளிர்ந்த காலநிலையை எதிர்கொண்டுள்ளதால், கிள்ளான் பள்ளத்தாக்கு முழுவதும் வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸாக குறைந்துள்ளது என்று மலேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சைபீரியமங்கோலியா பகுதியில் தென் சீனக் கடல் மற்றும் தீபகற்பத்தின் குறுக்கே வடக்கு சீனா வழியாக பருவமழை பெய்யும் போது இது மலேசியாவில் ஒரு பொதுவான நிகழ்வு ஆகும் என்று மலேசிய வானிலை மையத்தின் இயக்குநர்  ஜெயிலான் சைமன் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

தீபகற்பத்தில் இந்த காலகட்டத்தில் மேகமூட்டமான வானம் மற்றும் தொடர்ச்சியான மழை பொதுவானது. இது வெப்பநிலை குறைந்து அதிக ஈரப்பதத்தை ஏற்படுத்துகிறது. இது மூடுபனி உருவாவதற்கு வழிவகுக்கும்என்று அவர் பெர்னாமாவிடம் கூறினார்.

குளிர்காலம் மற்றும் மழை வரும் பிப்ரவரி ஆரம்பம் வரை தொடரும் என்று அவர் கூறினார்.

பல நாட்களாக தொடர்ச்சியான கனமழை மற்றும் வெள்ளம் ஏற்படக்கூடிய பகுதிகளில் உடனே வெள்ளம் ஏற்படக்கூடும் என்றும், கனமழையுடன் அது ஏற்பட்டால் நிலைமை மோசமடையக்கூடும் என்றும் ஜெயிலான் கூறினார்.

மழைக்காலம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.