Home One Line P1 4,000 மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் நாடு முழுவதிலும் தொடங்கப்பட்டது!

4,000 மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் நாடு முழுவதிலும் தொடங்கப்பட்டது!

558
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று திங்கட்கிழமை முதல், நாடு முழுவதும் உள்ள 100 தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்  (பிபி ஆர்எம்டி) தொடங்கப்பட்டது. இதில் பல மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

ஆரம்பமாக, நாடு முழுவதிலுமிருந்து 4,000 மாணவர்கள் 20-க்கும் மேற்பட்ட சத்தான உணவுகளைப் பெற்றுள்ளனர். இந்த திட்டத்திற்காக 22 மில்லியன் ரிங்கிட் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

உடல் குறைபாடுகள், ஏழைக் குடும்பங்களில் உள்ள தொடக்க மாணவர்கள் மற்றும் ஒராங் அஸ்லி அல்லது பெனான் பள்ளிகளில் உள்ள மாணவர்களை இலக்காகக் கொண்டு, 1979-ஆம் ஆண்டு முதல் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போதைய தரவுகள்படி சுமார் 517,000 மாணவர்களுக்கு இந்த உதவி வழங்கப்பட்டு வருகிறது.

#TamilSchoolmychoice

இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், மாணவர்களுக்கு சிறு வயதிலேயே அவர்களின் வளர்ச்சி செயல்முறையைத் தூண்ட உதவும் காலை உணவு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலம் சுகாதார கல்வி வழங்கப்படுகிறது என்பது விளக்கப்படுகிறது.

இந்தத் திட்டம் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களில் உள்ள மாணவர்களுக்கு உதவும் அரசாங்கத்தின் விருப்பத்திற்கு ஏற்ப பயனளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.