மொத்தம் 133 பேர்களுக்கு இந்த அறிவிக்கை வழங்கப்பட்டு, அடுத்த 3 மாதங்களுக்குள் இந்த நிலவரியை அவர்கள் செலுத்த வேண்டும் என்றும் அந்த அறிவிக்கை தெரிவிக்கிறது. இவர்களில் 124 பேர்கள் நேரடியாக இந்த அறிவிக்கையைப் பெற்றுக் கொண்டனர். நிலப்பட்டா ஒதுக்கப்படும் மக்களில் ஏறத்தாழ 90 விழுக்காட்டினர் இந்தியர்களாவர்.
நிலப்பட்டா பெறுபவர்களில் சிலரை, அவர்களுக்கான நில உரிமை வரி செலுத்துவதற்கான அறிவிக்கைக் கடிதம் கிடைத்ததும் அவர்களை ஈப்போ பாராட் மஇகா தொகுதித் தலைவர் எஸ்.ஜெயகோபி நேரடியாக அழைத்துச் சென்று பெம்பன் நிலம் அமைந்துள்ள வட்டாரத்தை சுற்றிக் காண்பித்தார்.