Home One Line P1 கொரொனாவைரஸ்: 80 மலேசியர்களை வுஹானிலிருந்து வெளியேற்ற தேசிய பேரிடர் துறை தயாராகுகிறது!

கொரொனாவைரஸ்: 80 மலேசியர்களை வுஹானிலிருந்து வெளியேற்ற தேசிய பேரிடர் துறை தயாராகுகிறது!

612
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொரொனாவைரஸ் பாதிப்பைத் தொடர்ந்து 80 மலேசியர்களை சீனாவின் வுஹான் நகரத்திலிருந்து அழைத்து வர தேசிய பேரிடர் துறை (நாட்மா) தயாராகி வருகிறது.

நிலைமை இன்னும் நிவாரணம் பெறாததால், அங்குள்ள மக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து வெளியுறவு அமைச்சர் டத்தோ சைபுடின் அப்துல்லா கடந்த புதன்கிழமை அமைச்சரவையால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

பயணிகள் விமானத்தில் விரைவில் அவர்கள் திரும்ப அழைத்து வரப்படுவார்கள் என்று அவர் கூறினார். அதன் தேதிகள் மற்றும் விமானங்களின் அறிவிப்புகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

இந்த விமானம் மருத்துவ பணியாளர்களையும் கொண்டு செல்லும், அவர்கள் (அழைத்து வரப்பட்டவர்கள்) மலேசியாவில் மீண்டும் பரிசோதிக்கப்படுவதற்கு முன்னர் சீனாவில் பரிசோதிக்கப்படுவார்கள், தேவைப்பட்டால், விடுவிக்கப்படுவதற்கு முன்பு சிறிது நேரம் தனிமைப்படுத்தப்படுவார்கள்.”

தற்போது, ​​வெளியுறவு அமைச்சகம் சீன வெளியுறவு அமைச்சகத்துடன் பல விஷயங்களைப் பற்றி விவாதித்து வருகிறது. அந்த பகுதி தற்போது மூடப்பட்டிருப்பது தெரிந்ததேஎன்று அவர் கூறினார்.

ஜப்பானுக்கும், தங்கள் மக்களை வெளியே கொண்டு வர விரும்பும் சில நாடுகளுக்கும் சீன உதவி செய்ததைப் போலவே, மலேசியர்களை மீண்டும் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் அது ஒத்துழைப்பைக் கொடுக்கும் என்று நம்புவதாக சைபுடின் கூறினார்.