Home One Line P1 உலு திராமில் நடந்த கும்பல் தாக்குதல் தொடர்பாக சைட் சாதிக் காவல் துறையில் வாக்குமூலம்!

உலு திராமில் நடந்த கும்பல் தாக்குதல் தொடர்பாக சைட் சாதிக் காவல் துறையில் வாக்குமூலம்!

452
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஜனவரி 31-ஆம் தேதி பத்து பாஹாட் உலு திராமில் நடைபெற்ற பெர்சாத்து கட்சியின் இளைஞர் பிரிவுக் கூட்டத்தில் நடந்த குழப்பம் காரணமாக பெர்சாத்து கட்சியின் இளைஞர் பகுதித் தலைவர் சைட் சாதிக் சைட் அப்துல் ரஹ்மானிடம் இன்று திங்கட்கிழமை வாக்குமூலம் பெறப்பட்டது.

விசாரணைக்கு உதவ ஆறு பேரை காவல் துறையினர் தடுத்து வைத்திருப்பதாக புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை துணை இயக்குநர் டத்தோ சலேஹுடின் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

“நாங்கள் இன்று காலை உரையாடலை (சைட் சாதிக்) பதிவு செய்வோம். மற்றவர்கள் பின்னர் விசாரிக்கப்படுவார்கள். பதிவு (உரையாடல்) புக்கிட் அமானில் நடைபெறுகிறது. விசாரணைக்கு புக்கிட் அமான் குற்ற புலனாய்வு பிரிவு உதவி செய்யும் ”என்று அவர் இன்று திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.

#TamilSchoolmychoice

பிப்ரவரி 1-ஆம் தேதி, இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சராக இருக்கும் சைட் சாதிக், சுமார் 200 பேரால்  திடீரென சூழப்பட்டார்.

அமைப்பாளர்கள் மற்றும் காவல்துறையினரின் ஆலோசனையின் பேரில் ‘தாக்குதல் நடத்துபவர்களின்’ குழுவைத் தவிர்ப்பதற்காக, அவர் வேலிக்கு மேலே ஏறி  குதித்து ஓட வேண்டிய சூழல் ஏற்பட்டது என்று சைட் சாதிக் கூறினார்.