Home One Line P1 “சூரிய சக்தி திட்டத்தை ஜெபாக் ஹொல்டிங்ஸ் நிறுவனத்திற்கு பெற்று தருவதற்கு ரோஸ்மா உதவினார்!”- முன்னாள் கல்வி...

“சூரிய சக்தி திட்டத்தை ஜெபாக் ஹொல்டிங்ஸ் நிறுவனத்திற்கு பெற்று தருவதற்கு ரோஸ்மா உதவினார்!”- முன்னாள் கல்வி அமைச்சர்

474
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சூரிய சக்தி திட்டத்தை எப்படியாவது ஜெபாக் ஹொல்டிங்ஸ் செண்டெரியான் பெர்ஹாட்டுக்கு பெற்று தருவதற்கு ரோஸ்மா மன்சோர் உதவியதாக முன்னாள் கல்வி அமைச்சர் மகாதீர் காலிட் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் கூறினார்.

இன்று திங்கட்கிழமை ஆரம்ப விசாரணையின்போது, ​​இந்த விவகாரம் தொடர்பாக தன்னை2016-ஆம் ஆண்டு டிசம்பர் 22-ஆம் தேதியன்று ரோஸ்மா தொடர்பு கொண்டதாக அவர் கூறினார். சூரிய சக்தி திட்டத்தின் செயல்பாட்டை தாமதப்படுத்த வேண்டாம் என்றும் நஜிப் ரசாக்கின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும் தமக்கு கூறப்பட்டதாக அவர் கூறினார்.

“அழைப்புக்கு பதிலளிக்கும் போது எனக்கு நினைவிருக்கிறது, சூரிய சக்தி திட்டத்தில் ஆசிரியர் அஸ்மிக்கு தாம் உதவி செய்வதாக ரோஸ்மா என்னிடம் கூறினார்.”

#TamilSchoolmychoice

“ரேயான் ராட்ஸ்வில் அப்துல்லாவை தனக்குத் தெரியாது என்று அவர் கூறினார். நஜிப்பின் (ரசாக்) அறிவுறுத்தல்களுக்கு கீழ்ப்படியும்படி அவர் என்னிடம் கூறினார்.”
“நான் ‘ஆம், ஆம், டத்தின்ஸ்ரீ ‘ என்று சொன்னேன். ரோஸ்மா ஜெபாக்குக்கு உதவுகிறார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை,” என்று மகாதீர் கூறினார்.

ஜெபாக் விவகாரங்களின் இயக்குனர் சைடி அபாங் சாம்சுடினின் பங்குதாரர் ரேயான்.

ஆசிரியர் அஸ்மி என்பவர் பெக்கான் அம்னோ செயலாளரான அகமட் அஸ்மி அபு தாலிப்பைக் குறிப்பதாக நம்பப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்தில் ஜெபாக் சரவாக் நகரில் உள்ள 369 பள்ளிகளுக்கு சூரிய மின்சாரம் வழங்க இருப்பதாக இருந்தது. இதன் மதிப்பு 1.25 பில்லியன் ரிங்கிட்டாகும்.