Home One Line P2 கொவிட்-19: கிருமி பரவுவதைத் தடுக்க சீன அரசு காகிதப் பணங்களை ஒழித்து, பிரித்து வருகிறது!

கொவிட்-19: கிருமி பரவுவதைத் தடுக்க சீன அரசு காகிதப் பணங்களை ஒழித்து, பிரித்து வருகிறது!

526
0
SHARE
Ad

பெய்ஜிங்: சீனாவில் ஆயிரத்திற்கும் மேலான உயிர்களைக் கொன்ற கொரொனாவைரஸ் (கொவிட்-19) பரவுவதைத் தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக சீனா இப்போது காகிதப் பணத்தை ஒழித்து பிரித்துள்ளது.

ஏழு முதல் 14 நாட்கள் வரை பணத்தை தனிமைப்படுத்தி சேமித்து வைப்பதற்கு முன் யுவான் காகிதத்தை கிருமி நீக்கம் செய்ய நிதி நிறுவனம் உயர் வெப்பநிலை ஒளியைப் பயன்படுத்துகிறது என்று சீன தேசிய வங்கி ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்துள்ளது.

இருப்பினும், மீண்டும் பயன்படுத்தப்படுவதற்கு முன்னர் தனிமைப்படுத்தப்பட்ட காலம், அப்பகுதியில் இக்கிருமியின் தாக்கத்தைப் பொறுத்தது என்று அது தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இன்றுவரை, சீனாவில் எழுபதாயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகெங்கிலும் 20- க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொவிட் -19, கிருமிகளை பொதுவில் ஒழிப்பதற்கும், தனிநபர்களுக்கிடையேயான தொடர்புகளைக் குறைப்பதற்கும் ஒரு தீவிரமான மற்றும் அவசர முயற்சியைத் தூண்டியுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு புதிய காகித பணத்தை வழங்கவும் வங்கிகளுக்கு வலியுறுத்தப்பட்டதாக பாங்க் ஆப் சீனாவின் துணை ஆளுநர் பேன் யிபை தெரிவித்தார்.

சமீபத்திய சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு முன்னர், மத்திய வங்கி நான்கு பில்லியன் யுவானை (2.3 பில்லியன் ரிங்கிட்) அவசர அவசரமாக ஹூபே மாகாணத்திற்கு திரும்பப் பெற்றது.

“இது பணத்தைப் பயன்படுத்தும் போது மக்களின் பாதுகாப்பையும் ஆரோக்கியத்தையும் உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது” என்று அவர் கூறினார்.