Home One Line P1 ஆறாவது மலேசிய மக்கள் தொகை மற்றும் வீட்டு கணக்கெடுப்பு ஜூலையில் தொடங்கும்!

ஆறாவது மலேசிய மக்கள் தொகை மற்றும் வீட்டு கணக்கெடுப்பு ஜூலையில் தொடங்கும்!

1137
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஜூலை 7 முதல் 2020 ஆண்டுக்கான மலேசிய மக்கள் தொகை மற்றும் வீட்டு கணக்கெடுப்பு தொடங்கப்படும்.

இது மூலமாக ஒவ்வொரு மலேசியரும் சம்பந்தப்பட்ட பெரிய அளவிலான வளர்ச்சித் திட்டங்கள் வடிவமைக்கப்படும்.

‘உங்கள் எதிர்கால தரவு’ என்ற கருப்பொருளின் கீழ் மக்கள் தொகை கணக்கெடுப்பு சுமார் 33.8 மில்லியன் மக்களை சம்பந்தப்பட்டிருக்கும் ஒன்பது மில்லியன் வீடுகளை உள்ளடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு மூலம் ஒவ்வொரு குடிமகனும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாளில் தங்கள் வழக்கமான வசிப்பிடத்திற்கு ஏற்ப கணக்கிடப்படுவார்கள்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு சமூக, பொருளாதார மற்றும் நிலையான அபிவிருத்தி நிகழ்ச்சி நிரல் 2030- இன் தேவைகளை உள்ளடக்கிய தேசிய மேம்பாட்டுத் திட்டங்களைத் தயாரிப்பதில் முக்கிய ஆதாரமாக இருக்கும் என்று பொருளாதார விவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2020 மக்கள் தொகை கணக்கெடுப்பின் தீவிரமான ஆரம்ப பணிகள் 2018- ஆம் ஆண்டு முதல் மலேசியாவின் புள்ளிவிவரங்கள் துறை, பொருளாதார விவகார அமைச்சகம், குறிப்பாக வீடுகளின் வரைபடம் மற்றும் பட்டியல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.