Home One Line P1 கொவிட்-19: “பொருளாதார ஊக்கத் திட்டங்களை நாடு ஆரம்பக்கட்டத்திலேயே திட்டமிட்டு விட்டது!” குவான் எங்

கொவிட்-19: “பொருளாதார ஊக்கத் திட்டங்களை நாடு ஆரம்பக்கட்டத்திலேயே திட்டமிட்டு விட்டது!” குவான் எங்

501
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொரொனாவைரஸ் (கொவிட்-19) பரவுவதைத் தொடர்ந்து, வெளி பொருளாதாரத்தின் தாக்கத்தைக் குறைப்பதற்கான அரசாங்க முயற்சியில் பொருளாதார ஊக்கத் திட்டங்களை அமல்படுத்திய ஆரம்ப நாடுகளில் மலேசியாவும் ஒன்று என்று நிதி அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது.

பிப்ரவரி 27-ஆம் தேதி அந்த தொகுப்பை அறிவிப்பதாக அறிவித்த பின்னர் நாடு “மெதுவாக” இது தொடர்பாக செயல்படுவதாக வெளிவரும் குற்றச்சாட்டுகளை அது மறுத்துள்ளது.

கொவிட்-19-இன் உண்மையான விளைவுகள் இன்னும் தெளிவாக இல்லாததால் பொருளாதாரத் திட்டத் தொகுப்பு தயாரிக்கப்பட்டு வருவதாக அதன் அமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“நாம் மற்ற நாடுகளைப் பார்க்கும்போது, ​​அவர்கள் மலேசியாவை விட பொருளாதார திட்டங்களை தாமதமாகவே அறிவிக்கிறார்கள், எனவே நாம் ஆரம்பத்திலேயே இதனை செய்து விட்டோம்”.

“எனவே, நாம் தாமதமாகிவிட்டோம் என்று சிலர் கூறுவது புரியவில்லை.”

“உணர்ச்சிவசப்பட வேண்டாம். அது உண்மைகளின் அடிப்படையில் இருக்க வேண்டும். நீங்கள் உண்மைகளைப் பார்த்தால், பொருளாதார திட்டத் தொகுப்பை அறிவித்த ஆரம்ப நாடுகளில் மலேசியாவும் ஒன்று என்பது உண்மைதான், ”என்று அவர் இன்று திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.

சுற்றுலா உள்ளிட்ட துறையால் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய அரசாங்கம் செயல்படும் என்றும் குவான் எங் கூறினார்.

“எனவே, இது முக்கிய நோக்கம் என்று நான் நினைக்கிறேன், வணிகத்தில் ஏற்ற தாழ்வுகள் உள்ளன. அரசாங்கம் உதவ முயற்சிக்கும், ”என்று அவர் குறிப்பிட்டார்.