Home One Line P1 கொவிட்-19 விளைவாக வேலை இழந்தால் உடனே புகார் அளிக்கவும்!- மனிதவள அமைச்சு

கொவிட்-19 விளைவாக வேலை இழந்தால் உடனே புகார் அளிக்கவும்!- மனிதவள அமைச்சு

509
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட்-19 தொற்று நோயைக் காரணமாக குறிப்பிட்டு வேலை இழந்த நபர்கள் உதவிக்காக தொழிலாளர் துறைக்கு புகார் அளிக்கலாம்.

சேவைகள் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட மிகவும் பாதிக்கப்பட்ட சில துறைகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அமைச்சகம் புரிந்து கொண்டதாக துணை மனிதவள அமைச்சர் டத்தோ மாஹ்புஸ் உமார் தெரிவித்தார்.

பல்வேறு துறைகளில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் தொடர்ந்து வருமான ஆதாரங்களைத் தேடுவதற்கு இது உதவும் என்று மாஹ்புஸ் கூறினார்.

#TamilSchoolmychoice

“நாங்கள் ஒரு துறையில் மட்டும் கவனம் செலுத்துவதில்லை. அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்த வேண்டும்.”

“மிக முக்கியமாக அவர்கள் முதலில் புகார் செய்ய வேண்டும். வேலை சம்பந்தமாக இருந்தால், அமைச்சகம், ஜேடிகே அல்லது தொழில்துறை உறவுகள் துறைக்கு புகார் அளிக்க வேண்டும்”

“இதற்கிடையில், வேலை நிறுத்தங்கள் ஒப்பந்தத்தை மீறுவதாக இருந்தால் அல்லது கொவிட்-19 விளைவாக நிறுத்தப்பட்டதாக இருந்தால், நடவடிக்கை எடுக்க எங்களுக்கு புகார் அளிக்க வேண்டும்” என்று அவர் நேற்று வியாழக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.