Home One Line P1 அன்வார் திங்கட்கிழமை மாமன்னரைச் சந்திக்கிறார் – “துரோகம் இழைக்கப்பட்டது” என்றார்

அன்வார் திங்கட்கிழமை மாமன்னரைச் சந்திக்கிறார் – “துரோகம் இழைக்கப்பட்டது” என்றார்

1021
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்று ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூர், சிகாம்புட்டில் உள்ள தனது இல்லத்தில் குழுமிய ஆதரவாளர்களுக்கு ஆறுதல் கூறிய பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், புதிய அரசாங்கம் அமைக்க அஸ்மின் அலி, பெர்சாத்து, அம்னோ, பாஸ், காகாசான் சரவாக், வாரிசான் சபா ஆகிய கட்சிகள் இணைந்து மேற்கொண்ட அரசியல் சூழ்ச்சி ஒரு துரோகச் செயல் என வர்ணித்தார்.

இதற்கிடையில் நாளை திங்கட்கிழமை அன்வார் இப்ராகிம் மாமன்னரைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளையே புதிய அரசாங்கம் அமைக்கப்படலாம் என எதிர்பார்ப்பதாகவும் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.