Home One Line P1 புதிய அரசாங்கம் அமைப்பு இன்று நடைபெறவில்லை – சதுராட்டங்களும், சதிராட்டங்களும் நாளை தொடர்கின்றன

புதிய அரசாங்கம் அமைப்பு இன்று நடைபெறவில்லை – சதுராட்டங்களும், சதிராட்டங்களும் நாளை தொடர்கின்றன

844
0
SHARE
Ad

பெட்டாலிங் ஜெயா – துன் மகாதீரின் தலைமையில் இன்றிரவே புதிய அரசாங்கம் அமைக்கப்படும் என்ற ஆரூடங்கள் பலரும் எதிர்பார்த்தபடி நிகழவில்லை. அரசியல் சதுராட்டங்களும், சதிராட்டங்களும் நாளையும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று எந்த முடிவும் எடுக்கப்படாது – அறிவிக்கப்படாது – என தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, பெட்டாலிங் ஜெயா ஷெரட்டான் தங்கும் விடுதியிலிருந்து தலைவர்களும் ஆதரவாளர்களும் வெளியேறத் தொடங்கினர்.

புதிய அரசாங்கம் நாளை திங்கட்கிழமை அமைக்கப்படலாம் என்றும் எனினும் இது மாமன்னரின் ஒப்புதலைப் பொறுத்த விவகாரம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.