Home One Line P1 ஒரு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து அன்வார், குவான் எங், முகமட் சாபு பிரதமரை சந்திக்க...

ஒரு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து அன்வார், குவான் எங், முகமட் சாபு பிரதமரை சந்திக்க அவரது இல்லம் செல்கின்றனர்!

970
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஒரு மணி நேரத்திற்கு மேலாக பிரதமர் அலுவலகத்தில் காத்திருந்த நம்பிக்கைக் கூட்டணி முக்கியத் தலைவர்கள் பிரதமர் அலுவலகமான பெர்டானா புத்ரா வளாகத்தை விட்டு வெளியேறியதாக அஸ்ட்ரோ அவானி தெரிவித்தது.

வளாகத்தை விட்டு வெளியேறிய ஆரம்ப நபர்களில் அமானா கட்சித் தலைவர் முகமட் சாபு ஆவார்.
அதைத் தொடர்ந்து ஜசெக பொதுச்செயலாளர் லிம் குவான் எங் மற்றும் பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் ஆகியோர் காலை 10.26 மணியளவில் வெளியேறினர்.

அவர்கள் அனைவரும் ஒரு மணி நேரமாக அந்த வளாகத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இருப்பினும், பெர்சாத்து கட்சியின் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமட் இந்த வளாகத்தில் இல்லை என்று அவானி தெரிவித்தது.

ஆயினும், தற்போது அவர்கள்  பிரதமரின் இல்லத்தை நோக்கி செல்வதாக அது மேலும் குறிப்பிட்டது.