Home One Line P1 புதிய அரசாங்கம் அமைப்பதற்கு ஊழல்வாதிகள், குற்றவாளிகளை மகாதீர் இணைத்துக் கொள்ளமாட்டார்!- காடிர் ஜாசின்

புதிய அரசாங்கம் அமைப்பதற்கு ஊழல்வாதிகள், குற்றவாளிகளை மகாதீர் இணைத்துக் கொள்ளமாட்டார்!- காடிர் ஜாசின்

722
0
SHARE
Ad

கோலாலம்பூர்: புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான எந்தவொரு முடிவினையும் டாக்டர் மகாதீர் முகமட் எடுத்தாலும், தனது அரசாங்கத்தில் ஊழல்வாதிகளை மகாதீர் அழைக்க மாட்டார் என்று பத்திரிகையாளர் காடிர் ஜாசின் கூறினார்.

ஒற்றுமை அரசாங்கத்தை அமைப்பதற்கான வதந்திகள் குறித்து தனது கருத்துக்களைக் கூறும்போது மகாதீரின் முன்னாள் ஊடக ஆலோசகரான காடிர் இவ்வாறு கூறினார்.

“டாக்டர் மகாதீர் எந்த அரசாங்கத்தை முடிவு செய்தாலும், நிச்சயமாக குற்றவாளிகள், ஊழழ்வாதிகள், குற்றம் சாட்டப்பட்டவர்களை அழைக்கமாட்டார். ”

#TamilSchoolmychoice

“கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த கூட்டத்தில் இது அவரது கட்சிக்கு விளக்கப்பட்டது.”

“சட்டம் பாதுகாக்கப்படும், உயர்மட்ட தலைவர்களின் வழக்குகள் தொடரப்படும், சீர்திருத்த திட்டங்கள் தொடரும்” என்று அவர் இன்று செவ்வாய்க்கிழமை தனது வலைப்பதிவில் எழுதினார்.