Home One Line P1 11 பிகேஆர் முன்னாள் தலைவர்கள் மகாதீர் கீழ் ‘தேசிய நல்லிணக்கத்தை’ விரும்புகின்றனர்!

11 பிகேஆர் முன்னாள் தலைவர்கள் மகாதீர் கீழ் ‘தேசிய நல்லிணக்கத்தை’ விரும்புகின்றனர்!

520
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிகேஆர் கட்சியிலிருந்து வெளியெறிய கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்மின் அலி தலைமையிலான 11 முன்னாள் பிகேஆர் தலைவர்கள், பிரதமராக பணியாற்ற டாக்டர் மகாதீர் முகமட்டுடன் தேசிய நல்லிணக்கத்தை ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

“14- வது பொதுத் தேர்தலில் ஊழல் நிறைந்த அரசை தோற்கடிக்க மக்கள் எழுந்த பின்னர், அவர்கள் இப்போது நிலையான ஓர் அரசாங்கத்தை விரும்புகிறார்கள், மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் கவனம் செலுத்துகிறார்கள்.”

“பொருளாதாரத்தை புதுப்பித்தல், வளர்ச்சியை உருவாக்குதல், வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் இனம் மற்றும் மதத்தைப் பொருட்படுத்தாமல் பகிரப்பட்ட செழிப்புக்கான கொள்கைகளை செயல்படுத்துதல் – இவை மக்களின் எண்ணம் அல்லவா?”

#TamilSchoolmychoice

“இந்த எண்ணங்களை நிறைவேற்ற, அரசியல்வாதிகள் குறுகிய கட்சி அரசியலுக்கு மேலே உயர வேண்டும். மக்களின் ஆசைகளை சில குழுக்களின் குறுகிய நலனுக்கு மேல் இருக்க வேண்டும்.”

“தேசிய நல்லிணக்கத்திற்கான விருப்பத்தை நாங்கள் ஆதரிக்கிறோம், அங்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் ஆசை மற்றும் தேசிய கொள்கைக்கு முன்னுரிமை அளிப்பார்கள்” என்று அவர்கள் கூறினார்கள்.