Home One Line P1 ஒற்றுமை அரசாங்கம் மூலம் மகாதீர் சர்வாதிகாரியாக உருமாறுவார்!- காலிட் சமாட்

ஒற்றுமை அரசாங்கம் மூலம் மகாதீர் சர்வாதிகாரியாக உருமாறுவார்!- காலிட் சமாட்

531
0
SHARE
Ad

கோலாலம்பூர்: டாக்டர் மகாதீர் முகமட்டின் ஒற்றுமை அரசாங்கத் திட்டத்தை ஒரு சர்வாதிகார அரசாங்கம் என்று அமானா தகவல் தொடர்புத் தலைவர் காலிட் சமாட் ஒப்பிட்டுள்ளார்.

“பெர்சாத்து வெளியேறும்போது மகாதீர் நம்பிக்கைக் கூட்டணியை விட்டு வெளியேறிவிட்டார். தனிப்பட்ட திறனில் தனக்கு ஓர் ஆணையை அவர் விரும்புகிறார், எந்த கட்சிகளுடனும் உறவுகள் இல்லை, யாருடனும் உறுதிமொழி இல்லை.”

“முழு மற்றும் மொத்த அதிகாரம். ஒரு சர்வாதிகாரத்தை நாங்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்?” என்று அவர் தமது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.